இளைஞர்களை முதலாளிகளாக மாற்றுவோம் - நடிகர் கமல்ஹாசன்

புதன், 6 ஜனவரி 2021 (16:44 IST)
இளைஞர்கள் அனைவரும் முதலாளிகளாக உருவாக்கப்படுவார்கள் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அத்தனை கட்சிகளும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில்,கமல்ஹாசன் இன்றைய பிரசாரத்தில் இளைஞர்கள் முதலாளிகாக உருவாக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திராவிட கட்சிகளுக்குப் போட்டியாக கமல்ஹாசன் தேர்தலை சந்திக்கவுள்ளார்.

 
அவருக்கு எதிராக அதிமுக அதிக விமர்சனங்களைத் தெரிவிக்க கமலும் கடுமையாக விமர்சித்து, சமீபத்தில் லஞ்சப்பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.அவர் செல்லுமிடமெல்லாம் பிரச்சாத்தின்போது, மக்கள் கூட்டம் கூடுகின்றனர்.

இந்நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் தொழிற்சங்கம் ரயில்வே துறையின் ஐசிஎஃப் தொழிற்சாலையில் ஐசிஎஃப் தொழிற்சங்கம் என பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

எனவே நடிப்பில் மக்களிடம் மனதில் இடம்பிடித்துள்ள கமல்ஹாசன், அரசியலில் ஆட்சி செய்யும் வகையில் தனது ஒவ்வொரு முயற்சியை எடுத்துவருகிறார்.

இந்நிலையில், இளைஞர்களை முதலாளிகளாக மாற்றுவோம் என குடியாத்தத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

தற்போது வேலைதேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரும் முதலாளிகளாக மாற்றும் திட்டம் மக்கள் நீதி மய்யத்திடம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்