மாடல் அழகியின் மாளிகையில்... பல கோடி நகைகள் கொள்ளை !

புதன், 18 டிசம்பர் 2019 (20:39 IST)
இங்கிலாந்து நாட்டு மாடல் அழகியின் மாளிகையில் இருந்த ரூ. 470 கோடி மதிப்புள்ள  நகைகள் திருடப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் பார்முலா கார் பந்தயக் கம்பெனியின் முன்னாள் தலைமை நிர்வாகியின் பெர்னி என்பவரின் மகள் தமரா எக்லெஸ்டோன். இவர் தமது கணவர்  மற்றும் குழந்தைகளுடன் அங்குள்ள ஒரு சொகுசு  வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில்,  அந்த மாளிகையில் திருடர்கள் புகுந்து, தமராவின் ரூ.470 கோடியே 47 லட்சத்து 71 ஆயுரம்  மதிப்பிலான நகைகளைகளை  திருடிச் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து மாடல் அழகி போலீஸாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் போலிசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்