அரசியலுக்கு வர சொல்லி அழைப்புகள் வருகின்றன… கிச்சா சுதீப் பகிர்ந்த தகவல்!

வியாழன், 16 பிப்ரவரி 2023 (15:08 IST)
தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் கிச்சா சுதீப். ராஜமௌலி இயக்கத்தில் அவர் நடித்த ஈகா திரைப்படம் இந்தியா முழுவதும் ஹிட் ஆகி அவருக்கு பிரபலத்தைப் பெற்றுத் தந்தது. அதையடுத்து இப்போது அவர் பேன் இந்தியா படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் விரைவில் கர்நாடகாவில் தேர்தல் வர உள்ள நிலையில் கிச்சா சுதீப் அரசியலுக்கு வர உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள சுதீப் “எனக்கு பல அரசியல் தலைவர்களோடு தொடர்பு உள்ளது. அரசியலுக்கு வர சொல்லி அழைப்புகளும் வருகின்றன. ஆனால் நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும் இதை ரசிகர்கள் விரும்புகிறார்களா என்றும் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்