சிம்புவின் ‘மாநாடு’ வில்லன் தயார்! ஜனவரி இறுதியில் படப்பிடிப்பு!

புதன், 18 டிசம்பர் 2019 (22:33 IST)
சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கவ்8ள்ள மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது
 
ஏற்கனவே இந்த படம் சிம்புவை வைத்து தயாரிக்க இருந்த நிலையில் திடீரென இந்த படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமுக தீர்வு ஏற்பட்டதால் மீண்டும் இந்த படம் தற்போது தொடங்க உள்ளது
 
இந்த படத்திற்காக சமீபத்தில் உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்த சிம்பு, ஜனவரி மூன்றாவது வாரம் இந்த படத்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் சிம்புவின் கேரக்டருக்கு இணையான ஒரு வில்லன் கேரக்டர் இருப்பதாகவும், அந்த கேரக்டரில் நடிக்க ஒரு பிரபல நடிகரை தேர்வு செய்ய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியானது 
 
இந்த வில்லன் கேரக்டரில் நடிக்க அரவிந்த்சாமியை அணுகியபோது அவர் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது விஜய் நடித்த புலி உள்பட பல படங்களில் வில்லனாக நடித்த கிச்சா சுதீப் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிம்பு மற்றும் கிச்சா சுதீப் மோதும் காட்சிகள் இந்த படத்தின் ஹைலைட் காட்சிகளாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்