தமிழ் சினிமாவில் குறும்பட அலை வீசிய போது அதிலிருந்து வந்து வெற்றி பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்பராஜ். அவர் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா, ஆகிய படங்கள் சூப்பர்ஹிட்டாகி அவரை நம்பிக்கைக்குரிய இயக்குனராக காட்டின.
இந்நிலையில் பேட்ட படத்துக்குப் பிறகு சில முறை ரஜினியை சந்தித்து சில கதைகளை சொன்னதாகவும், ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் “நான் ரஜினி சாரின் தீவிர ரசிகனாக இருப்பதால் அவரை வைத்து அதிக படம் பண்ண வேண்டும் என்று பேராசை படுகிறேனோ என்று தோன்றியது. ஆனால் இப்போது அவரை சாதாரணமாக சந்தித்துப் பேசி வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.