அருவி இயக்குனரின் அடுத்த படம்… கதாநாயகன் இவர்களில் ஒருவர்!

செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:34 IST)
அருவி இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் வாழ் படத்தின் தோல்விக்கு பின்னர் தன்னுடைய அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார்.

அருவி படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் வாழ். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தார். இந்த படம் சோனி லைவ் நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி ரிலிஸ் ஆனது. ஆனால் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் இப்போது அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தை அருவி படத்தைத் தயாரித்த எஸ் ஆர் பிரபுவே தயாரிக்க உள்ளாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் கார்த்தி அல்லது சூர்யா இருவரில் ஒருவர் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அருண் பிரபுவும் இந்த படத்தில் தன்னுடைய வழக்கமான பாணியை விட்டு விலகி கமர்ஷியல் படமாக உருவாக்க உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்