கைதி ஆனார் கார்த்தி – ஜெட் வேகத்தில் ஷூட்டிங் !

புதன், 6 மார்ச் 2019 (13:59 IST)
தேவ் படத்திற்குப் பிறகு கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு கைதி என செய்திகள் வெளியாகியுள்ளன.

கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி, கடந்த வருடம் வெளியான குடும்ப ரசிகர்களை டார்கெட் செய்து வெளியான கடைக்குட்டி சிங்கம் மிகப் பெரும் வெற்றி பெற்று கடந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமானது. அதனையடுத்து அவர் நடிப்பில் உருவான அடுத்தப்படமான தேவ் விற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

அதனால் விநியோகஸ்தர்களும் இதுவரை கார்த்திப் படத்திற்கு இல்லாத விலையைக் கொடுத்து வாங்கி ரிலிஸ் செய்தனர். காதலர் தினத்தன்று வெளியான தேவ் முதல்நாளே ரசிகர்களை ஏமாற்றி விட்டதால் படம் படுதோல்வி அடைந்தது. கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் மிகமோசமானப் படம் என்ற அவப்பெயரையும் பெற்றுள்ளது.

இதையடுத்து தனது அடுத்தப்படத்தை வெற்றிப்படமாக ஆக்கவேண்டிய கட்டாயத்தில் கார்த்தி இருக்கிறார். தற்போது அவர் மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒருப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியே கிடையாது. இப்படத்தின் 80 விழுக்காடு படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் படத்திற்கு இப்போது ‘கைதி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்