கைதியில் இருந்து விடுதலையான கார்த்தி !

வியாழன், 9 மே 2019 (15:19 IST)
கார்த்தி நடிக்கும் படமானக் கைதிப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி, கடந்த வருடம் வெளியான குடும்ப ரசிகர்களை டார்கெட் செய்து வெளியான கடைக்குட்டி சிங்கம் மிகப் பெரும் வெற்றி பெற்று கடந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமானது. அதனையடுத்து அவர் நடிப்பில் உருவான அடுத்தப்படமான தேவ் விற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் அந்தப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.

இதையடுத்து தனது அடுத்தப்படத்தை வெற்றிப்படமாக கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் கார்த்தி இருக்கிறார். தற்போது அவர் மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒருப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியே கிடையாது. இந்தப் படத்திற்கு இப்போது ‘கைதி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தமிழின் முதல் முழுநீள பிரிசன் பிரேக் படமாக உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்டு மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்