இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் கார்த்தியை இயக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு தற்காலிகமாக கார்த்தி 29 எனப் பெயர் வைக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியாகியுளது. அதில் கடலில் ஒரு ராட்சச கப்பல் வருவது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. படத்தில் முக்கியமானக் கதாபாத்திரங்களில் நிவின் பாலி மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. பீரியட் படம் என்பதால் அதற்கான முன்தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது ஜூன் 27 ஆம் தேதி காரைக்காலில் ஷூட் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் பெரும்பகுதி காரைக்கால் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.