இளம் நடிகர்கள் 30 கோடி சம்பளம் கேட்கிறார்கள்… கரண் ஜோஹர் ஆதங்கம்!

புதன், 29 டிசம்பர் 2021 (10:03 IST)
பாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் அறியப்படுபவர் கரண் ஜோஹர்.

ஷாருக் கானின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான கரண் ஜோஹர் தர்மா புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனம் கிட்டத்தட்ட ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் போல இயங்கக் கூடிய ஒன்று. இந்நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வரும் கரண் ஜோஹர் நடிகர்களின் சம்பளம் குறித்து பேசியுள்ளார்.

அதில் ‘கடந்த சில மாதங்களில் இளம் நடிகர்கள் தங்கள் சம்பளங்களை இரு மடங்காக உயர்த்தி இருக்கிறார்கள். இத்தனைக்கும் இவர்கள் படம் கொரோனாவால் பாதித்து சரியாக போகாத நிலையிலும்.  நான் இவர்களுக்கு பெரிய தொகை தருவதற்குப் பதிலாக படத்தை சிறப்பாக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தாராளமாக வழங்குவேன்.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்