அப்போ கிடைச்சது பிச்சை.. இப்போ கிடைச்சதுதான் சுதந்திரம்! – கங்கனா பேச்சால் சர்ச்சை!

வெள்ளி, 12 நவம்பர் 2021 (13:19 IST)
இந்தி திரைப்பட நடிகை கங்கனா ரனாவத் சுதந்திரம் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் பல படங்களில் நடித்து வரும் கங்கனா ரனாவத் தமிழில் சமீபத்தில் வெளியான தலைவி படத்தின் மூலம் பிரபலமனார். இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் சமீபத்தில் பெற்றார்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா ரனாவத் “இந்தியாவிற்கு 1947ல் கிடைத்தது வெறும் பிச்சைதான். இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் 2014ல் தான் கிடைத்துள்ளது” என பேசியுள்ளார். பாஜக ஆதரவாளரான கங்கனா பாஜக ஆட்சியமைத்ததைதான் அப்படி குறிப்பிடுகிறார் என்று பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்