விஸ்வரூபம் 2 - கைவிரித்த கமல்

புதன், 25 மார்ச் 2015 (11:50 IST)
விஸ்வரூபம் 2 படத்தின் சில காட்சிகள் முடிக்கப்பட வேண்டும், அதனால்தான் படம் வெளியாகாமல் தள்ளிப் போகிறது என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு கமலின் சமீபத்தியே பேட்டி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
 

 
விஸ்வரூபம் 2 முடிந்துவிட்டது. அது ஏன் இன்னும் வெளியாகாமல் தள்ளிப் போகிறது என்று தெரியவில்லை. விஸ்வரூபம் 2 -இன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்தான் படத்தை எப்போது வெளியிடுவது என்பதை சொல்ல வேண்டும். அவர் ஏன் பட வெளியீட்டை தள்ளிப் போடுகிறார் என்று புரியவில்லை என கமல் கூறியுள்ளார்.
 
இந்தப் படத்துக்காக கமல் 100 கோடி ரூபாய் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் வாங்கியதாகவும், அது அதிகம் என நினைக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன், அவ்வளவு பெரிய தொகையை படம் வசூலிக்குமா என்ற அவநம்பிக்கையில் இருப்பதாகவும், அதனால்தான் பட வெளியீடு தள்ளிப் போவதாகவும் ஒருசாரர் கூறுகின்றனர்.
 
உண்மை என்ன என்பதை ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொன்னால்தான் உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்