விஸ்வரூபம் 2 படத்தின் சில காட்சிகள் முடிக்கப்பட வேண்டும், அதனால்தான் படம் வெளியாகாமல் தள்ளிப் போகிறது என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு கமலின் சமீபத்தியே பேட்டி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இந்தப் படத்துக்காக கமல் 100 கோடி ரூபாய் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் வாங்கியதாகவும், அது அதிகம் என நினைக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன், அவ்வளவு பெரிய தொகையை படம் வசூலிக்குமா என்ற அவநம்பிக்கையில் இருப்பதாகவும், அதனால்தான் பட வெளியீடு தள்ளிப் போவதாகவும் ஒருசாரர் கூறுகின்றனர்.