உயிரே உறவே தமிழே...கமல்ஹாசன் பிரமாண்ட மாநாட்டுக்கு அழைப்பு !!

ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (00:03 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் அன்று பெண்கள் சக்தி என்ற தலைப்பில் பெண்மையைப் போற்றும் பெருநிகழ்வு காட்டாங்குளத்தூரி உள்ள எஸ்.ஆர்.எம். பலகலைக்கழக அரங்கில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

’சீரமைப்போம் தமிழகத்தை ’என்ற பொருண்மையில் நமது கட்சியின் மாநில மாநாடு பிப்ரவரி 21 ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் காவல்துறை இதுவரை அனுமதி கொடுக்கவில்லை.அதனால் மாநாட்டு நிகழ்வை மார்ச் 7 ஆம் தேதி ஒத்தி வைக்கிறோம்.

பிப்ரவரி 21 ஆம்தேதி மக்கள் நீதி மய்யத்தின் 4 ஆம் ஆண்டு விழா சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விமரிசையாக நடைபெறும்.மார்ச் 7 ஆம் தேதி ’சீரமைப்போம் தமிழகத்தை’மக்கள் நீதி மய்யத்தில் மாபெரும் தேர்தல் மாநாடு வண்டலூர் ஓரகடம் சாலையில் உள்ள மன்னிவாக்கத்தில் நடைபெறும்.

மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் அன்று பெண்கள் சக்தி என்ற தலைப்பில் பெண்மையைப் போற்றும் பெருநிகழ்வு காட்டாங்குளத்தூரி உள்ள எஸ்.ஆர்.எம். பலகலைக்கழக அரங்கில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

உயிரே உறவே தமிழே... உங்களுக்கு சில அறிவிப்புகள். pic.twitter.com/ix1MH3Zd97

— Kamal Haasan (@ikamalhaasan) February 13, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்