இது குறித்து அவர் கூறுகையில், " ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியான இந்தத் தகவல் உண்மைக்கு புறம்பானது. இந்த தவறான செய்தி எங்களின் தொண்டு நிறுவனத்துக்கு பல சிக்கல்களை உருவாக்கி விடும். கமல்ஹாசன் ஏற்கனவே 16 கோடி ரூபாயை அளித்துள்ளதால் ஏன்? இந்த தொண்டு நிறுவனத்துக்கு பண உதவி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் மற்றவர்களுக்கு ஏற்படக் கூடும். எனவே தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். எங்களது குழந்தைகளுக்கு உதவிகள் செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.