சிங்கப்பூரில் காஜல் அகர்வாலின் மெழு சிலை திறப்பு...!

புதன், 5 பிப்ரவரி 2020 (10:54 IST)
தென்னிந்திய சினிமா நடிகைகள் யாருக்கும் இதுவரை கிடைக்காத ஒரு பெருமை காஜல் அகர்வாலுக்கு கிடைத்துள்ளது. தெலுங்கு , தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கி வரும் காஜல் அகர்வால் தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 
 
உலகின் முக்கிய நபர்களின் மெழுகுச்சிலைகள் சிங்கப்பூரில் உள்ள  ‘மேடம் துசாட்ஸ்’ என்றா அருங்காட்சியகத்தில் வைக்கப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத், ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கஜோல், ஐஸ்வர்யா ராய்  பலரது சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது. 
 
அந்த வகையில் தற்போது தென்னிந்திய நடிகை ஒருவருக்கு இந்த இடத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆம்,  காஜல் அகர்வாலின் ஆள் உயர சிலை அழகிய புடவை அணிவித்து உருவாகியுள்ளனர். இன்று இந்த சிலை திறப்பு விழா சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று சிலை திறந்து வைத்த காஜல் பின்னர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்