படையப்பா வெற்றியால் என்னுடைய அடுத்த படம் தோற்றது! கேஎஸ் ரவிக்குமார் சொன்ன ரகசியம்!

திங்கள், 19 ஜூலை 2021 (15:11 IST)
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த ஒரே படமான மின்சார கண்ணா திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியானது.

கே எஸ் ரவிக்குமார் படையப்பா படத்தை இயக்கி முடித்து அதன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் இயக்கிய படம்தான் மின்சாரக் கண்ணா. அந்த படத்தில் அப்போதைய வளர்ந்து வரும் நடிகரான விஜய், ரம்பா மற்றும் குஷ்பு ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

அதற்குக் காரணம் என்ன என்பதை இப்போது படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் ‘படையப்பா போன்ற ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்து விட்டு அதன் பின்னர் சாதாரணமாக ஒரு படம் எடுத்ததால் அதை ரசிகர்கள் ரசிக்கவில்லை. என்னுடைய முந்தைய படத்தின் வெற்றியே எனது அடுத்த படத்தின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது’ எனக் கூறியுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்