இந்தியில் ஹீரோயின் ஆகும் ஜோதிகா... 25 வருடதிற்கு பின்னர் ரீஎன்ட்ரி!

திங்கள், 15 மே 2023 (13:04 IST)
நடிகை ஜோதிகா கடந்த 1998 ஆம் ஆண்டு அஜித் நடித்த வாலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன்பின் அவர் விஜய் அஜித் சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
திருமணத்திற்கு பின்னர் ஒரு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே, என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அதன் பின்னர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் 
 
தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அவர் தற்போது குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் 25 வருடதிற்கு இந்தியில் ரீ என்ட்ரி கொடுக்க போகிறாராம் ஜோதிகா. மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஜோதிகா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தை குயின் படத்தை இயக்கிய இயக்குனர் விகாஸ் இயக்குகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்