சூப்பர் ஸ்டாருக்கு நன்றி கூறிய 'ஜிகர்தண்டா-2 ' படக்குழு

செவ்வாய், 14 நவம்பர் 2023 (21:01 IST)
‘’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர் என்று கூறி  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை படக்குழுவை பாராட்டிய நிலையில், ராகவா லாரன்ஸ்,. எஸ்.ஜே.சூர்யா,  கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் ரஜினிக்கு நன்றி கூறியுள்ளனர்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவான ஜிகர்தண்டா 2 படத்தை பார்த்து ரஜினிகாந்த ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில்,  ‘’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்ஜே சூர்யா இந்நாளின் திரை உலக நடிகைவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார். திருவோட கேமரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டுக்குரியது.  சுப்பராயன் சண்டை காட்சிகள் அபாரம். சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமான இசையமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரோடி தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார். ’ என்று  தெரிவித்தார்.

இதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ். தலைவா  மிகவும் நன்றி… உங்களில்  நெருக்கடியான வேலைப்பளுவுக்கு மத்தியில் இதற்கான நேரம் ஒதுக்கி இப்படத்தை பார்த்து பாராட்டியதற்கு நன்றி. இந்தக்கடிதம் மூலம் இப்படம் வெற்றி என  மிகவும் சந்தோஷப்படுகிறோம்! குருவே சரணம் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் எஸ்.ஜே.சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜும் ரஜினிகாந்திற்கு நன்றி கூறியுள்ளனர்.

Thalaiva! Thank you so much for taking time from your busy schedule and appreciating the entire team for #Jigarthandadoublex.

The amount of happiness I get from this letter is equal to the movie’s success.

Thank you so much Thalaiva! Guruve Saranam

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்