ஆழ்வார்க்கடியானுடன் சபரிமலையில் அருள்மொழி! – ஜெயம்ரவி வெளியிட்ட போட்டோ!

செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (08:44 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் நடிகர் ஜெயம் ரவியும், ஜெயராமும் சபரிமலை சென்று வழிபட்டுள்ளனர்.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோசன் பணிகள் களைகட்டியுள்ளன. இதற்கிடையே படத்தில் ஆழ்வார்க்கடியானாக நடித்த ஜெயராமும், அருள்மொழியாக நடித்த ஜெயம் ரவியும் கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு சென்று ஐயப்பனை வழிபட்டுள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜெயம் ரவி “பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராமுடன் பம்பையில்!” என்று பதிவிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராமுடன் பம்பையில் !! #PonniyinSelvan #SwamiyeSaranamAyappa pic.twitter.com/MS5XtF6VeR

— Arunmozhi Varman (@actor_jayamravi) September 23, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்