ரோஹித் வெமுலாவின் கதையை படமாக்குகிறாரா பா ரஞ்சித்!

செவ்வாய், 20 ஜூலை 2021 (16:33 IST)
இயக்குனர் பா ரஞ்சித் தனது அடுத்த படத்துக்கான தலைப்பு நட்சத்திரம் நகர்கிறது என்று அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். இவர், தற்போது சர்பாட்டா பரம்பரை என்ற படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கியுள்ளார். இந்தப்படம் ஜூலை 22ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் பா. ரஞ்சித்தின் அடுத்தப்பட டைட்டில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தற்போது அட்டகத்தி ஸ்டைலில் ஒரு காதல் கதை இயக்கப்போகிறாராம். இந்த படத்திற்கு "  “நட்சத்திரம் நகருகிறது”  என டைட்டில் வைத்துள்ளார்.

வித்யாசமான இந்த டைட்டில் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது. இந்த படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக நடிகர் நடிகைகளை வைத்து 2 மாதம் ஒத்திகை செய்ய உள்ளாராம். இதற்கு முன்னர் கமல் தன் சில படங்களுக்கு இதுபோல ஒத்திகை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஞ்சித்தின் அந்த படம் மறைந்த முன்னாள் மாணவர் ரோஹித்  வெமுலாவின் வாழ்க்கையைதான் படமாக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்