அல்லு அர்ஜூனின் புஷ்பா -2 படப்பிடிப்பு தள்ளிப்போனதா?

செவ்வாய், 28 ஜூன் 2022 (17:37 IST)
சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது.

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா the Rule உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம். புஷ்பா சர்வதேச சந்தையை பிடிக்க முயலும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லுவதாக இரண்டாம் பாகம் உருவாகும் என கூறப்பட்டது.

இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூலையில் ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் முதல் படத்தின் பட்ஜெட்(ரூ.150) ஐ விட சுமார் ரூ.250 கோடி அதிகமாக அதாவது ரூ.400 கோடியில் இப்படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட உள்ளதால்,  இப்படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ள்தாகவும், இதுகுறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என தெரிவித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்