"இரண்டாம் குத்து" இருட்டு அறையில் முரட்டுக் குத்து part 2 டைட்டில் இது தான்!

செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (12:45 IST)
சந்தோஷ் இயக்கத்தில் காமத்தை விரும்பும் பேய் எனும் காமெடி கதைக்களத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இப்படத்தில் கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, கருணாகரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அடல்ட் காமெடி ரசிகர்கள் மத்தியில் யங்ஸ்டர்ஸை குறிவைத்து வெளிவந்த இப்படம் ஓஹோன்னு ஓடியது.

அதையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சந்தோஷ் இயக்கி அவரே ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் ஹீரோயின்களாக கரிஷ்மா மற்றும் அக்ரித்தி சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் அப்டேட் குறித்த தகவல்களுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது தகவல் ஒன்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ளது

அதவாது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு "இரண்டாம் குத்து" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. கொரோனா ஊரடங்கினாள் தள்ளி சென்ற இப்படத்தின் ரிலீஸ் விரைவில் திரையில் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்