சிவகார்த்திகேயன் வழக்கில் எங்களுக்கு தொடர்பில்லை: வருமானவரித்துறை

புதன், 13 ஏப்ரல் 2022 (15:36 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் எங்களுக்கு தொடர்பு இல்லை என்றும் எங்களை வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வருமானத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது 
 
நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் வருமான வரித்துறையினர் தன்னிடம் இருந்து டிடிஎஸ் பணம் பெற்று கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த நிலையில் வருமான வரித்துறையும் இந்த மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள  நிலையில் வருமானவரித்துறை இதுகுறித்து தாக்கல் செய்த பதில் மனுவில் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் எங்களுக்கு தொடர்பில்லை என்றும் வழக்கில் இருந்து எங்களை  நீக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை கோரிக்கை விடுத்துள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்