ஒரு தடவை முடிவு பண்னிட்டேன்னா… விஜய் டயலாக் பேசிய ஷ்ரதா கபூர்

ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (11:27 IST)
பிரபல இந்தி திரைப்பட நடிகை ஷ்ரதா கபூர் தளபதி விஜய்யின் போக்கிரி பட மாஸ் வசனத்தை பேசி மாஸ் காட்டியுள்ளார்.

பிரபாஸ் நடித்து பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள படம் “சாஹோ”. சுஜித் இயக்கியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஆஷிக்கி 2 படத்தின் மூலம் தமிழ் இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட ஷ்ரதா கபூர் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றுள்ளது. பிரபாஸ், ஷ்ரதாகப்பூர், இயக்குனர் சுஜித் ஆகியோர் அந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய ஷ்ரதா கபூர் “போக்கிரி” படத்தில் விஜய் பேசும் மாஸ் வசனமான “ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்கமாட்டேன்” என்னும் வசனத்தை அவருக்கே உரிய அழகு தமிழில் பேசியுள்ளார்.

ஷ்ரதா கபூர் இந்த வசனத்தை பேசியிருப்பது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்