பூமியை அடுத்து விண்ணில் ஒலிக்கும் இளையராஜாவின் பாடல்!

செவ்வாய், 18 ஜனவரி 2022 (18:48 IST)
பூமியில் இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒலிக்காத இடமே இல்லை என்று கூறலாம் அந்த அளவுக்கு அவருடைய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உலகம் முழுவதும் ஒலித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பூமியை அடுத்து விண்ணிலும் இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒலிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குழு சாட்டிலைட் ஒன்றை செய்து உள்ளது என்பதும் நாசா உதவியுடன் இந்த சேட்டிலைட் விண்ணிற்கு அனுப்பப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த சாட்டிலைட்டில் இளையராஜாவின் பாடலை ஒலிக்க அவரிடம் அனுமதி பெற்று உள்ளதாகவும் எனவே இந்த சாட்டிலைட் ஏவப்படும் போது விண்ணில் இளையராஜாவின் பாடலும் ஒலிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் இசை உலக ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை எழுப்பியுள்ளது என்பது குறிபிடத்தக்கது 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்