எனக்கு இந்த இரண்டை தவிர வேறு எதுவும் தெரியாது: நடிகர் செந்தில்

புதன், 6 மே 2020 (17:05 IST)
எனக்கு இந்த இரண்டை தவிர வேறு எதுவும் தெரியாது
பழம்பெரும் காமெடி நடிகர் செந்தில் நேற்று முதல் டுவிட்டர் இணையதளத்தில் இணைந்ததாக செய்திகள் வெளியானது. அவரது பெயரில் இதுகுறித்து ஒரு அறிக்கையையும் வெளியானதால் இந்த தகவல் உண்மை என நம்பி அனைத்து ஊடகங்களும் இதனை செய்தியாக வெளியிட்டன. இந்த செய்தி திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தான் டுவிட்டரில் இல்லை என்று நடிகர் செந்தில் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம் நான் நடிகர் செந்தில் பேசுகிறேன். பத்திரிகை ஊடகம் மற்றும் டிவி ஊடகம் ஆகிய இரண்டு ஊடகங்கள் மட்டுமே எனக்கு தெரியும். மற்ற ஊடகங்கள் எனக்கு தெரியவே தெரியாது.
 
ட்விட்டர் மற்றும் பேஸ்புக் இது போன்ற எதுவும் எனக்குத் தெரியாது. தவறான முறையில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தயவு செய்து இதை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார் 
 
மேலும் கொரோனா வைரஸ் தற்போது இருப்பதால் அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் கைகளை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். யார் அறிவுரை சொன்னாலும் கேட்டு கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். நடிகர் செந்திலின் இந்த வீடியோ தற்போது டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Our Great Comedy Actor #Senthil is allegdely saying that,he doesn't have any #Twitter account.He too requests people to wear #mask and wash #hands to rescue from #Corona @spp_media pic.twitter.com/CMWXSg8cQM

— Priya - PRO (@PRO_Priya) May 6, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்