நேசமணி மட்டும் மஞ்சள் டர்பன் அணிந்திருந்தால் – ஹர்பஜன் சிங் கலக்கல் ட்வீட் !

வியாழன், 30 மே 2019 (09:18 IST)
இந்திய அளவில் டிரண்ட் ஆகிவரும் ப்ரே பார் நேசமணி ஹேஷ்டேக்கில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கும் கலந்து கொண்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தேர்வானதில் இருந்து தமிழில் டிவீட்களைப் போட்டு தமிழக மக்களைக் குஷிப்படுத்தி வருகிறார். கிரிக்கெட் மற்றுமல்லாது தமிழக அரசியல் மற்றும் சினிமா குறித்தும் அவ்வப்போது டிவிட்டரில் கருத்துக் கூறிவருகிறார்.

இந்நிலையில் நேற்றில் இருந்து சமூக வலைதளங்களில் ட்ரண்டிங்கில் இருக்கும் நேசமணிக்காக பிராத்தனை செய்யுங்கள் ஹேஷ்டேக்கில் அவரும் கலந்துகொண்டுள்ளார். இது சம்மந்தமாக வடிவேலு காமெடிக் காட்சியின் புகைப்படம் ஒன்றைப் போட்டு அவர் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

’என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்