ராணா போதைக்கு அடிமையானவரா??

திங்கள், 17 ஜூலை 2017 (20:35 IST)
பாகுபலி படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்த ராணாவிற்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதாக என பேசப்படுகிறது. 


 
 
போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக தெலுங்கு நடிகர்கள் ரவி தேஜா, நவ்தீப், தனிஷ், நடிகைகள் சார்மி கவுர், முமைத் கான் ஆகியோருக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
இந்த விஷயத்தில் எனது மகன்கள் ராணாவுக்கோ அபிராமுக்கோ போதைப் பொருள் பழக்கம் இல்லை என்று பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு டக்குபாட்டி தெரிவித்துள்ளார். 
 
மேலும், ராணா போதை பழக்கமுடையவர் என தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்