பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் – முதன் முதலாக ஆக்‌ஷன் கதைக்களத்தில்!

வெள்ளி, 30 அக்டோபர் 2020 (16:30 IST)
இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

நடிகர் அதர்வா அறிமுகமான பாணா காத்தாடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பத்ரி வெங்கடேஷ். அதன் பின்னர் செம்ம போத ஆகாத எனும் படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் பிளான் பண்ணி பண்ணனும் எனும் படத்தை பிக்பாஸ் புகழ் ரியோவை வைத்து இயக்கி முடித்துள்ளார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலிசாகவில்லை.

இந்நிலையில் ஒப்போது அதே கம்பெனிக்காக கௌதம் கார்த்திக்கை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் படத்தின் ஒட்டுமொத்த பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.  கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகளை தேடும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்