நாயகி மையப் படங்களில் தொடர்ச்சியாக நயன்தாரா நடித்து வருகிறார். அவர் தற்போது நடித்து வரும் 5 படங்களில் டோரா, அறம், கொலையுதிர்காலம் மூன்றும் நாயகி மையப் படங்களே.
தற்போது பரத் ரங்காச்சாரி என்பவர் இயக்கத்தில் ஈராஸ் தயாரிக்கும் புதுப்படம் ஒன்றில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். வெளிநாட்டில் பத்திரிகையாளராக இருக்கும் நயன்தாரா தனது பூர்வீகம் மற்றும் அடையாளத்தை தேடி பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து இந்தியாவுக்கு வருவதுதான் படத்தின் கதை. த்ரில்லராக இது தயாராகவுள்ளது.