2003ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில், விக்ரம், த்ரிஷா, விவேக், கோட்டா சீனிவாச ராவ், ரமேஷ் கண்ணா, விஜயகுமார் நடித்த படம் ‘சாமி’. விக்ரம் போலீஸாக நடித்திருக்கும் இந்தப் படம், சூப்பர் ஹிட். அப்போதைய மதிப்புக்கு 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம், 31 கோடி ரூபாயை வசூலித்தது.
14 வருடங்கள் கழித்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார் ஹரி. விக்ரம், த்ரிஷாவே இந்தப் பாகத்திலும் நடிக்க, கூடுதலாக கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார். முதல் பாகத்தில் விக்ரமுக்கும், த்ரிஷாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்தப் படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அமைவதால், விக்ரமுடன் கீர்த்தி சுரேஷைச் சேர்த்துவைக்க முடியாது.
விக்ரமை ஒருதலையாக கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறார் என்றால் கூட, அதையும் ‘சிங்கம்-2’, ‘சிங்கம்-3’யின் பயன்படுத்தி விட்டார் ஹரி. எனவே, அப்பா – மகனாக விக்ரம் நடிக்கலாம் என்கிறார்கள். முதல் பாதியில் அப்பா விக்ரம் – த்ரிஷா காட்சிகளும், இரண்டாம் பாதியில் மகன் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் காட்சிகளும் இருக்கலாம் என்கிறார்கள்.