கோவா செல்லும் சூர்யா படக்குழுவினர்!

திங்கள், 25 அக்டோபர் 2021 (17:01 IST)
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கிட்டத்தட்ட முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது.

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டு விட்டன. இன்னும் சில பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதனால் இந்த திரைப்படம் இந்த ஆண்டே வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஏனென்றால் தீபாவளிக்கு சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. அதனால் குறுகிய இடைவெளியில் இன்னொரு படம் வெளியானால் பெரிய எதிர்பார்ப்பு இருக்காது என்பதால் அடுத்த ஆண்டுதான் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படமாக்கப்பட வேண்டிய பாடல் காட்சிக்காக எதற்கும் துணிந்தவன் படக்குழு கோவாவுக்கு செல்ல உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்