வசூலில் சொதப்பிய கிங் ஆஃப் கொத்தா… சுட்டுக்கொண்ட பேன் இந்தியா படம்!

வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (07:52 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரீட்சியமான நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் உருவான சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தெலுங்கில் உருவான இந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது.

இதையடுத்து துல்கர் சல்மானின் அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அந்த வகையில் அவர் நடிப்பில் இப்போது உருவாகியுள்ள கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் பேன் இந்தியா ரிலீஸாக கடந்த் வாரம் ரிலீஸானது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான இந்த திரைப்படம் ரசிகர்களைப் பெரிதாகக் கவரவில்லை. அதனால் பாக்ஸ் ஆபிஸில் இந்த படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் சேர்த்து இந்த படம் 30 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் பட்ஜெய் 30 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

வழக்கமான நல்ல கதையம்சத்தோடு வரும் மலையாளப் படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து வந்தன. ஆனால் மற்ற மொழிகளில் ரிலீஸ் ஆகும் பேன் இந்தியா படங்களைப் பார்த்து, அவர்களும் அதே போல உருவாக்க நினைத்து கையை சுட்டுக் கொண்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்