ஏ.ஆர்.ரஹ்மான் - அமீனுடன் இணைந்து யுவன் பாடிய ''தெய்வீகப் பாடல்''!

செவ்வாய், 11 அக்டோபர் 2022 (21:22 IST)
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், அவரது மகன் அமீன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணைந்து முகமது நபி அவர்களை புகழும் வகையில் ஒரு இசைப்பாடல் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது மகன் இசையமைப்பாளராக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். இவர்களும் யுவனும் சேர்ந்து  தலா அல் பத்ரு அலாய்னா என்ற முகமது நபிகள் அவர்கள் மதினாவுக்கு வந்தபோது, மதீனா மக்களால் பாடப்பட்டது. புகழ்பெற்ற இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.ஆர்.அமீன் ஆகிய மூவரும் இணைந்து  பாடியுள்ளனர்..

இந்த நிலையில், அமீன் தன் டுவிட்டர் பக்கத்தில் மூவரும் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

மேலும்,  தலா அல் பத்ரூ அலாய்னா போன்ற தெய்வீகமான பாடலை இசையமைப்பது எனக்கு கிடைத்த பெருமை என்று யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

pic.twitter.com/KQVYJ3ndEo

— A.R.Ameen (@arrameen) October 11, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்