பிச்சைகாரன் பட வசனத்தின் விளைவு: இயக்குனர் சசி பெருமிதம்!!

வியாழன், 10 நவம்பர் 2016 (11:18 IST)
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிச்சைக்காரன் படத்தில் ஒரு நல்ல வசனத்தை இயக்குனர் சசி வைத்திருந்தார். அந்த வசனத்தில் வருவது போன்றே இந்திய அரசு ரூ.500,1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது.


 
 
மத்திய அரசின் முடிவு குறித்து பிச்சைக்காரன் படத்தின் இயக்குனர் சசி கூறும்போது "பிரதமர் மோடியின் இந்த கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது. பிச்சைக்காரன் படத்தில் நான் வைத்த அந்த வசனத்தால் மாற்றம் வரும் என்று நினைக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு மாற்றம் வந்தால் நல்லது என்ற எண்ணத்தில் தான் அந்த வசனத்தை வைத்தேன்” என தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர், படத்தில் நல்ல காட்சிகளை, வசனங்களை வைக்கவேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனால் இதனால் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் பாதிப்பு வருமோ என்ற பயமும் உள்ளது. இந்த படத்தில் இந்த காட்சி விடாப்பிடியாக தான் வைத்தேன். தற்போது அதற்கு இவ்வளவு வரவேற்று கிடைத்திருப்பது பெருமிதத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்