உதயநிதிக்காக இளம் நடிகரின் படத்தை தள்ளிப்போடும் இயக்குநர்!

திங்கள், 13 செப்டம்பர் 2021 (23:20 IST)
உதயநிதி நடிப்பில் உருவாகும் ஆர்ட்டிகிள் 15 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கான துருவ் விக்ரமின் படத்தை தள்ளிப்போட இயக்குநர் மாரி செல்வராஜ் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  

இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த் ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். அந்த படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, கனா இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கி வருகிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்த நிலையில் கொரோனா பாதிப்பால் இயக்குனர் பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் தற்போது மீண்டும் இப்படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது.

இதற்கிடையில் துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராக் ஒரு படம் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில், இப்படத்தை தள்ளிவைத்துவிட்டு உதயநிதி படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்