தனுஷ் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் கொடுத்த உதயநிதி!

திங்கள், 13 செப்டம்பர் 2021 (06:45 IST)
நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று தற்கொலை செய்து கொண்ட தனுஷ் என்ற மாணவரின் பெற்றோருக்கு உதயநிதி ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்துள்ளார் 
 
நேற்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட்தேர்வு நடைபெற்ற நிலையில் நீட்தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் அரசியல் பிரமுகர்கள் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தனுஷ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் நிதி உதவியாக அவரது பெற்றோருக்கு வழங்கினார். மேலும் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறிய உதயநிதியை நீட்தேர்வு காரணமாக இனியும் ஒரு உயிர் போகாத வண்ணம் அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
முன்னதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலரும் தனுஷ் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்