சிரிப்பில் கூட இதயம் விஜயம்: விஜய்க்காக பார்த்திபன் எழுதிய கடிதம்

செவ்வாய், 30 ஜனவரி 2018 (22:17 IST)
இயக்குனர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு வரும் மார்ச் 8ஆம் தேதி திருமணம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கோலிவுட் திரையுலக பிரமுகர்களுக்கு பார்த்திபன் கடந்த சில நாட்களாக நேரில் சென்று திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார்

இந்த நிலையில் இன்று அவர் விஜய் வீட்டிற்கு சென்று அவரிடம் திருமண அழைப்பிதழை வழங்கி தனது மகள் திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் விஜய் தாயாரிடமும் அவர் திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார்/

விஜய்யை சந்தித்த சந்தோஷத்தில் பார்த்திபனின் தமிழ் ஊற்றெடுக்க, உடனே டுவிட்டரில் விஜய் குறித்து ஒரு கவிதையை எழுதியுள்ளார். அந்த கவிதை இதோ:

உயரம் எப்படி ஆழத்தில்?
அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..!
அமைதியாய்...அந்த உயர் நட்சத்திரம்.
சிரிப்பில் கூட இதயம் விஜயம்!
மகனின் பெருமை பூரிப்பாக,
ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்!


 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்