தனது ஸ்டைலில் இருந்து மாறிய பாண்டிராஜ்… சூர்யாவுக்காக செய்த மாற்றம்!

திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (10:19 IST)
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ராதிகா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பாண்டிராஜ் வழக்கமாக தனது பாணியில் குடும்பப் படமாக மட்டும் எடுக்காமல் சூர்யாவின் மாஸ்க்கு ஏற்றவாறு திரைக்கதை உருவாக்கியுள்ளாராம். பாண்டிராஜ் இயக்கத்தில் இந்த படம் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்