ஆனால் அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அந்த திரைப்படம் தொடங்கப்படவில்லை. படப்பிடிப்புக்காக திருவண்ணாமலை சென்ற இயக்குனர் லெனின் பாரதி, அங்கு நடந்த மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டார். இதனால் படப்பிடிப்பு தொடங்குவது தாமதம் ஆனது.
இந்நிலையில் இப்போது அவர் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார். தன்னுடைய உதவி இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நான்கு தயாரிப்பாளர்களில் ஒருவராகவும், ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கவும் உள்ளார். இந்த படத்தில் சார்லி, காளி வெங்கட் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளார்கள்.