திலீப்பை கம்பி எண்ண வைத்த 12 வினாடி போன் கால்

செவ்வாய், 11 ஜூலை 2017 (14:09 IST)
மலையாள நடிகர் திலீப் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப்பிடம் பெசிய 12 வினாடி போன் கால் திலீப் சிறை செல்ல காரணமாய் அமைந்துள்ளது.


 

 
மலையாள நடிகை கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் எப்படி இந்த வழக்கில் காவல்துறையினரிடம் சிக்கினார் என்பது தெரியவந்துள்ளது.   
 
நடிகை கடத்தல் வழக்கில் காவல்துறையினர் நடிகர் திலீப் மீது சந்தேகப்பட்டு அவரிடம் சுமார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காவல்துறையினர் திலீப்பிடம் பாவனாவுக்கு நடந்த சம்பவம் குறித்து உங்களுக்கு எப்படி தெரியவந்தது என கேட்டுள்ளனர்.
 
அதற்கு திலீப், தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் தனக்கு போன் செய்து நடிகைக்கு நடந்த சம்பவம் பற்றி தெரிவித்ததாக கூறினார். இதையடுத்து காவல்துறையினர் ஆன்டோவிடம் விசாரணை நடத்தினர். 
 
ஆன்டோ ஜோசப், சம்பவம் நடந்த இரவே திலீப்புக்கு போன் செய்தேன். ஆனால் அவர் எடுக்கவில்லை. மீண்டும் மறுநாள் காலை போன் செய்து நடந்த சம்பவம் பற்றி கூறியபோது அப்படியா என்று மட்டும் கேட்டார் என்று கூறினார். 
 
காவல்துறையினர் திலீப், ஆன்டோ போன் கால் ஹிஸ்டிரை எடுத்து பார்த்தபோது அந்த போன் கால் வெறும் 12 வினாடி இருந்துள்ளது. இதில்தான் காவல்துறையினருக்கு திலீப் மீதான சந்தேகம் உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்