ஏ.ஆர்.ரஹ்மான் பாகுபலி பட ஹிரோவின் படத்திற்கு அதிக சம்பளம் கேட்டாரா?

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (17:10 IST)
இந்திய சினிமாவில் பாகுபலி ஒரு வசூல் சாதனையை நிகழ்த்தியது. இதில் நாயகனாக நடித்த பிரபாஸ் உலகம் அளவில் பாப்புலர் ஆகிவிட்டார்.

இப்படத்தை அடுத்து, அவர் நடிப்பில் வெளியான் சாஹோ மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம் ஆகும்.

தற்போது அவர் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, மகாநதி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் எனபவரின் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என பிரபாஸ் நினைத்ததாகவும்,  ஆனால் இப்படத்தில் பணியாற்ற ரஹ்மான் 4 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகிறது.

பிரபாஸ் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றுவாரா இல்லையா என்பது ஒரு சஸ்பென்ஸாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்