துருவங்கள் பதினாறு இயக்குனரின் நரகாசுரன்

சனி, 28 ஜனவரி 2017 (17:33 IST)
துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்து நரகாசுரன் என்ற படத்தை இயக்குகிறார்.

 
சென்ற வருட இறுதியில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. கச்சிதமான  த்ரில்லர் என ஷங்கர் உள்ளிட்ட திரையுலகினரும் பாராட்டினர். அனைத்துத் தரப்பினருக்கும் படம் லாபகரமாகவும் அமைந்தது.
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து நரகாசுரன் என்ற படத்தை இயக்குவதாகவும், இதுவும் மர்மக்கதைதான் எனவும் கார்த்திக் நரேன்  கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்