மூன்று மனிதர்களைப் பற்றிய, மூன்று காலகட்டங்களில் நடக்கிற கதை, தரணி. இதில் ஒருகதை தெருக்கூத்தைப் பற்றியது. வழக்கொழிந்து வரும் அக்கலையை சினிமா மூலம் புத்துயிரூட்டும் இயக்குனர் குகன் சம்பந்தம் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்.
குமரவேல் நாயகனாக நடிக்க ஆரி, அஜய் கிருஷ்ணா கதை நாயகர்களாக வருகிறார்கள். வருணிகா, சாண்ட்ரா என்று இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.