கதை திருட்டு பயத்தில் தானா சேர்ந்த கூட்டம்

சனி, 1 ஜூலை 2017 (17:56 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடாமல் இருக்க காரணம் கதை திருட்டுதான் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ஹித்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தை தழுவி எடுக்கப்படும் படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதுவரை வெளியாகவில்லை. சூர்யா ரசிகர்கள் பயங்கர கோபத்தில் உள்ளனர். 
 
பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும் என இயக்குநர் கூறிய நிலையில் இதற்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஒரிஜல் ரீமேக் உரிமை சீனியர் நடிகர் ஒருவரிடம் உள்ளதாம். மேலும் அந்த படத்தை தழுவி தானா சேர்ந்த கூட்டம் உருவாவதால் அவர் பயங்கர டென்ஷனில் உள்ளாராம். 
 
இதனால்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடாமல் உள்ளார்களாம்.  

வெப்துனியாவைப் படிக்கவும்