50 லட்சம் கேட்டு பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்!!

வியாழன், 2 மார்ச் 2017 (15:08 IST)
கமெர்ஷியல், ரொமான்ஸ், ஹீரோயின் மையமாக இருக்கும் திரைப்படம் என அனைத்திலும் ஹிட் கொடுத்துவிட்டா நடிகை ஆலியா பட். 


 
 
இந்நிலையில், ரூ.50 லட்சம் பணம் கொடுக்காவிட்டால் பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் அவரின் தாயை கொன்றுவிடப் போவதாக ஒருவர் இயக்குனர் மகேஷ் பட்டிற்கு போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
 
முன்பு இதே போல் நடந்த போது பணம் கேட்டவர்கள் D Gang எனும் அண்டர்வேர்ல்ட் கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்த 13 பேரை போலீஸ் கைது செய்தது.
 
தற்போது மீண்டும் 50 லட்ச ரூபாய் பணம் கேட்டு அலியா பட்டின் தந்தைக்கு தொடர்ந்து ஃபோன் கால்களும், மெஸேஜ்களும் வந்து கொண்டிருக்கின்றன. 

வெப்துனியாவைப் படிக்கவும்