முன்னாள் மனைவி மீது வழக்கு தொடர்ந்த டி இமான்: என்ன காரணம்?

திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:17 IST)
முன்னாள் மனைவி மீது இசையமைப்பாளர் டி இமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் 
 
டி இமான் மற்றும் மோனிகாரிச்சர்ட் ஆகிய இருவரும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் மனைவி மோனிகாரிச்சர்ட் மீது டி இமான் வழக்குப்பதிவு செய்துள்ளார். தனது குழந்தைகளின் ஒரிஜினல் பாஸ்போர்ட் தன்னிடம் இருக்கும் நிலையில் அதனை மறைத்துவிட்டு தனது முன்னாள் மனைவி மோனிகா குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்
 
இதுகுறித்து பதிலளிக்குமாறு மோனிகா மற்றும் மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்