பிரபல பாடகர் மீது அவதூறு வழக்கு தொடர....அமலாபாலுக்கு நீதிமன்றம் அனுமதி !

செவ்வாய், 3 நவம்பர் 2020 (18:26 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான அமலாபாலின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நபர் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மும்பையில் வசித்து வரும் பிரபல பாடகர் பவ்னிந்தர் சிங் நடிகை அமலா பாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதன்பின்னர் சிறுதுநேரத்திலேயே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அவர் நீக்கிவிட்டார்.

இதையடுத்து பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில் , திருமணமானதாகக் கூறி வெளியிட்ட புகைப்படங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஸ்குமார் பாடகர் பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்