ஆரம்பத்தில் நடிக்க வந்து அசிங்கப்பட்டேன்; எஸ்.ஜே.சூர்யா

திங்கள், 26 ஜூன் 2017 (16:52 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள படம் ‘மெர்க்குரி’. இதுதவிர தனது ஸ்டோன் பெஞ்ச் பட நிறுவனம் சார்பில் ‘மேயாத  மான்’என்ற படத்தையும் தயாரிக்கிறார். இவற்றின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. அதில் இயக்குனர்கள் மணிரத்னம், பாரதிராஜா, கார்த்திக் சுப்புராஜ், எஸ்.ஜே. சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 
இதில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, ஒரு காலத்தில் நான் நடிக்க வந்த போது, இவன் ஏண்டா நடிக்க வர்றான். பேசாம டைரக்ட்  பண்ணலாமே என்று என் காது படவே சொல்லி வலியை ஏற்படுத்தினார்கள். ஆனால் அதை எல்லாம் மீறி, எஸ்.ஜே.சூர்யாவால் நடிக்க முடியும் என்று நம்பி என்னை ‘இறைவி’ படத்தில் நடிக்க வைத்தவர் கார்த்திக் சுப்புராஜ்.
 
கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள மேயாதமான் படத்தின் கதையை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். இது தவிர  பிரபுதேவாவை வைத்து ‘மெர்க்குரி’ படத்தையும் இயக்கி இருக்கிறார். இவருடைய பட நிறுவனம் தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் மட்டுமல்ல, ஹாலிவுட் படங்களையும் தயாரிக்கும். அந்த விழாவுக்கு நானும் வந்து வாழ்த்துவேன் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்