தமிழ்ப் படத்தில் சிரஞ்சீவி

சனி, 13 மே 2017 (16:03 IST)
தெலுங்கில் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

 
விஜய், சமந்தா நடித்த ‘கத்தி’ படத்தின் ரீமேக்கான ‘கைதி எண் 150’ படத்தில் நடித்த சிரஞ்சீவி, அடுத்ததாக முக்கியமான ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ஆந்திராவின் சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை  வரலாற்றில் அவர் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரின் சிறப்பை, தெலுங்கு மக்களிடம் கொண்டுபோய்  சேர்ப்பதற்காக இந்தப் படத்தை எடுக்கிறார்களாம்.
 
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை, வாய்ப்பிருந்தால் ஹிந்தியிலும் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. சுரேந்தர் ரெட்டி படத்தை இயக்கப் போகிறார். ராம் சரண்,  இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்